Direkt zum Hauptbereich

ஜிக்கி

ஜிக்கி

அருள்தாரும் தேவமாதாவே - ஞான சௌந்தரி..
வாராய் நீ வாராய் - மந்திரி குமாரி 
ராஜசேகரா என் மேல் மோடி செய்வதேனடா - அனார்கலி 
மானைத் தேடி மச்சான் வரப் போறான் - நாடோடி மன்னன்
மயக்கும் மாலைப்பொழுதே குலேபகாவலி
ஊரெங்கும் தேடினேன் ஒருவரை - தேனிலவு 
துள்ளாத மனமும் துள்ளும் - கல்யாண பரிசு 


நாடகமெல்லாம் கண்டேன் - மதுரை வீரன்
யாரடி நீ மோகினி - உத்தம புத்திரன்
காதலென்னும் காவியம் - வட்டத்துக்குள் சதுரம்
நினைத்தது யாரோ - பாட்டுக்கொரு தலைவன்
ஒத்தையடி பாதில ஊரு சனம் - ராக்காயி கோயில்
வண்ண வண்ண சொல்லெடுத்து - செந்தமிழ்ப் பாட்டு 
ராத்திரி பூத்தது காட்டுரோஜா - தாயம் ஒண்ணு
நான் உன்ன நினச்சேன் - கண்ணில் தெரியும் கதைகள்

காற்றில் இழைந்து வரும்போது இவரின் குரல் மட்டும் மயக்கும் தனி வசீகரமாக மனதை என்னமோ செய்யும்.. அது சோக பாடலானாலும் சரி, துள்ளல் இசை பாடல் என்றாலும் சரி, ஜிக்கியின் குரல் வளம் தனியாகவே நம்மை பாதிக்கும்.. பெரும்பாலும் கிளப் பாடல்கள் பாடினாலும், ஒவ்வொன்றும் காதுகளை குளிரசெய்யும் தேன் சாரல் எனலாம். 

ஆந்திராவின் சந்திரகிரியை சேர்ந்த கஜபதி நாயுடுவுக்கும், சென்னையைச் சேர்ந்த ராஜகாந்தம்மாவுக்கும் பிறந்த ஒன்பது பிள்ளைகளில் மூத்தவர் கிருஷ்ணவேணி 1937ல் பிறந்தார். சென்னை மயிலாப்பூரில் நடுத்தெருவில் குடிசை பகுதியில் வறுமையோடு வளர்ந்தார். 1943ல் ஆறு வயதில் பந்துலம்மா என்ற தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அந்த படத்தில் பாடவும் செய்தார்.

கிருஷ்ணவேணி 6 வயது முதலே சங்கீதத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். பதினோரு வயதிலேயே இவரது தாய்மாமன் சிட்டிபாபுவின் முயற்சியினால் இசை சிகரம் எஸ். வி. வெங்கட்ராமனின் இசையில், ஞானசௌந்தரி படத்தில் குழந்தை ஞானசௌந்தரி பாடும் அருள்தாரும் தேவமாதாவே ஆதியே இன்ப ஜோதியே என்ற பாடலைப் பாடினார். அது 1948ஆம் ஆண்டு. பாடல் பெரும் வரவேற்ப்பை பெற்றது. தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் பாடினார்.

கிருஷ்ணவேணியின் குரலை கேட்ட இசைமேதை ஜி. இராமநாதன், குழந்தை குரலிது வேண்டாம், லீலாவை பாட செய்யலாம் என்ற பலரது எதிர்ப்பையும் பொருட்படுத்தாது கிருஷ்ணவேணியின் 13வது வயதில், 1950 இல் மாடர்ன் தியேட்டர்ஸாரின் மந்திரி குமாரி படத்தில் வாராய் நீ வாராய், உலவும் தென்றல் காற்றினிலே போன்ற பாடல்களை திருச்சி லோகநாதனுடன் சேர்ந்து பாடவைத்தார். அப்போது வேறு ஒரு பாடகி கிருஷ்ணவேணி என்று இருந்ததால் ஜிக்கி என பெயரும் மாற்றி அமைக்கப்பட்டது. பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் கசிந்தது. எல்லோருடைய வாயும் இந்த பாடலை முணுமுணுத்தது. அந்த வெற்றியானது 1950-1960 கலீல் ஜிக்கி எனும் பாடகியின் பொற்காலத்தை உறுதி செய்தது. எல்லா இசை அமைப்பாளர்களின் இசையிலும் இவரின் குரல் பயணம் தொடர்ந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், என எல்லா திராவிட மொழிகளிலும் பாடினார். 

1952 இல் திரை இசை திலகம் கே.வி. மகாதேவன் இசையமைத்த குமாரி படத்தில் ஏ. எம். ராஜாவுடன் ஜிக்கி முதன்முதலில் பாடினார். பிறகு சில படங்களிலும் இருவரும் இணைந்து பாடினர். அப்போது இருவருமே மிக பிரபலமான பாடகர்கள். தொடர்ந்து இவர்கள் பணியாற்றியபோது இடையே காதலும் வந்தது. மூன்று ஆண்டுகளாய் காதலை மனதுக்குள்ளேயே பூட்டி வைத்து காத்திருந்தார். பின்னர் 1955ல் மகேஸ்வரி என்ற படத்தின் அழகு நிலாவின் பவனியிலே பாடலின் ஒத்திகை இடைவேளையின் போது, ஏ. எம். ராஜா தனது காதலை ஜிக்கியிடம் வெளியிட்டார். ஆனால் ஜிக்கி அந்த காதலை ஒத்துக்கொள்ளவில்லை...

தன் குடும்ப சூழலை சொல்லி, மிகப்பெரிய குடும்பத்தை தாங்கும் தனது வருமானம் தம்பி, தங்கைகளுக்கு அவசியம் என்று கூறி அந்த காதலை மறுத்தார். என்றாலும் ராஜா குடும்பத்தை தானும் கவனித்து கொள்வதாகவும் உறுதி அளித்தார். எனினும் 1952ல் சந்தித்து 1955ல் காதலை சொல்லி, மேலும் 3 ஆண்டுகள் கழித்து 1959ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பிரபலமான இசை ஜோடிகளான ஏ.எம்.ராஜா, ஜிக்கி திருமணம் அந்நாளில் வெகு விமரிசையாகவும், பரபரப்பாகவும் நடைபெற்றது. 

Kommentare

Beliebte Posts aus diesem Blog

இன்று பொன்விழா காணும் இசைக்குயிலுக்கு வாழ்த்துக்கள்! சின்னகுயில் சித்ரா என்றாலே இனிய குரலும், மலர்ந்த சிரிப்புமே நமக்கு நினைவில் வரும். 1963 ஆம் ஆண்டில் ஜூலை 27ல் மேடை பாடகராக விளங்கிய கிருஷ்ணன் நாயருக்கும் வீணை மேதை சாந்தகுமாரிக்கும் இளைய மகளாக கேரளா திருவனந்தபுரத்தில் சித்ரா பிறந்தார்.
கே. ஆர். விஜயா ஓர் இந்திய நடிகை. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிப் படங்கள் உட்பட சுமார் 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். புன்னகை அரசி என அழைக்கப்படும் நடிகை இவர். கே. ஆர். விஜயாவின் தாய் கேரளாவையும் தந்தை ஆந்திரப் பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள். இவர் 1960 களில் நடிக்கத் தொடங்கி சுமார் 40 ஆண்டுகளுக்கு அதிகமாக நடித்து வருகிறார். இவர் நடித்த முதற்படமான கற்பகம் 1963 இல் வெளிவந்ததுlist of films in which she has performed.[3] [edit]Filmography Year Film Language Role Co-Star(s) 2010 Simha Telugu Narasimha's Mother Nandamuri Balakrishna, Nayantara 2008 Dasavatharam Tamil Nagesh's wife Kamal Hasan, Asin 2005 Chandramukhi Tamil Senthilnathan's mother Rajinikanth, Prabhu Ganesan 2004 Shock 2003 Ondagona Baa Kannada 2003 Mr. Brahmachari Malayalam Vasumathi 2002 Nakshathrakkannulla Rajakumaran Avanundoru Rajakumari Malayalam Bhageerathiyamma 2001 Jai Ganesh Deva 1999 Pranaya Nilavu Malayalam Lakshmi 1995 Thirumanassu Thampuratti 1994 Bhairava Dweepam Tel...
  இளையராஜாவுக்கு யார் போட்டி ? ** தேரோட்டம் நடக்கும் சாலை என்றாலும் அதிலும் எல்லா வண்டிகளும் போகத்தானே செய்யும் ? இளையராஜா திரையிசையமைப்பில் கொடிகட்டிப் பறந்த காலத்திலும் அவரோடு போட்டி போட்டு இசையமைத்தவர்கள்