Direkt zum Hauptbereich
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான ...
அவர் பாடிக்கொண்டிருந்தார், அது வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான அஸ்ஸாம் பழங்குடி கிராமம். அவர்கள் மொழியிலேயே பாடி அவர்களை மெய் மறக்க செய்துகொண்டிருந்தார். பாடி முடித்ததும், அந்த மக்களால் ஒரு பாம்பு அவர் கழுத்தில் பரிசாக போடப்பட்டது.


அப்போது பஞ்சாப் பிரச்சினை இந்தியாவில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நேரம், பஞ்சாப் பொற்கோவிலில் பஞ்சாபியிலேயே பாடினார். பாடி முடித்ததும் சிலர் அவரிடம் அழுதபடி இனி தீவிரவாத செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று உறுதி கூறினார். இது எல்லாம் சினிமா காட்சிகள் அல்ல. 

இசைக்கு என்றே பிறந்த, 18 மொழிகளில் பாட மட்டும் அல்ல, 14 மொழிகளையும் நன்கு கற்று அர்த்தம் புரிந்து தெரிந்து கொண்ட வாணிஜெயராம் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்கள். 10000 சினிமா பாடல்கள், 3000 மேற்பட்ட தனி பாடல்கள். சங்கராபரணம், அபூர்வ ராகங்கள், சுவாதி கிரணம் படங்களுக்கு என்று 3 தேசிய விருதுகள். தமிழ்நாடு, குஜராத், ஆந்திரா, ஒரிசா மாநிலங்களில் சிறந்த பின்னணி பாடகிக்கான பல விருதுகள். தென் இந்திய மீரா என்று சிறப்பு பட்டம் என எல்லாம் பெற்றும் அமைதியான பாடகியாய் இன்றும் இளமையான குரலோடு இசை மேடைகளை அலங்கரிக்கிறார் இந்த இசை வாணி.

தமிழ்நாட்டின் வேலூர் நகரில் நவம்பர் 30, 1945ல் பிறந்த தமிழ்ப் பெண் இவர். உண்மையான பெயர் கலைவாணி என்பதே. தாயார் பத்மாவதி வீணை வாசிப்பதில் பெரிய மேதை. ஆறு பெண்கள், 3 ஆண்கள் என ஒரு பெரிய குடும்பத்தில் 5ஆவது மகளாய் வாணி பிறந்தார். அக்காவுக்கு பாட்டு சொல்லி கொடுக்க வந்த கடலூர் ஸ்ரீனிவாச ஐயங்கார் வாணியின் இசை ஆர்வம் கண்டு அவருக்கும் சொல்லி கொடுக்க ஆரம்பித்தார். கர்நாடக சங்கீதத்தின் நீள, அகலங்களை கண்டு உணர்ந்து சங்கீத சாகரத்தில் நீந்த ஆரம்பித்தார். 8 வயதிலேயே அகில இந்திய வானொலியில் பாட ஆரம்பித்தார்.

கல்லூரி படிப்பு சென்னை ராணி மேரி கல்லூரியில் நடந்தது. கல்லூரி தினங்களிலேயே பல பரிசுகள் இசைக்காக பெற்றார். பின்னர் ஜெயராம் அவர்களை மணந்துகொண்டு மும்பையில் வாழ் தொடங்கினார். அங்கு தான் வாணியின் திறமைகள் பளிச்சிட ஆரம்பித்தது. வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல், கணவரின் ஒத்துழைப்போடு ஹிந்துஸ்தானி சங்கீதம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். பிரபல மேதை உஸ்தாத் அப்துல் ரஹ்மான் கானிடம் இந்துஸ்தானி சங்கீத பயிற்சி பெற்றார். தினமும் 18 மணிநேர அசுர சாதகம், தும்ரி பஜன் மற்றும் கஜல் பாடுவதில் மிகுந்த தேர்ச்சி பெற்றார் வாணி.

குரு வியந்தார் அந்த சரஸ்வதி தேவியே பாடுவது போல உணர்ந்தார். 1969, மார்ச் 1ம் தேதி வாணி ஜெயராம் இசை அரங்கேற்றம் பொழிந்தார், மும்பை இசை மழையில் தத்தளித்தது. மும்பையின் அத்தனை சபாக்களும் வாணியிடம் தேதி கேட்டு காத்திருந்தன. இந்தி இசை அமைப்பாளர் வசந்த் தேசாய் ஹிந்தி சினிமாவில் பாட அழைத்தார். அந்த பாடல் பதிவு ஆனது. பின்னர் மாரத்தி பாடல் வாய்ப்புகள் பல வந்தன. இயக்குனர் ரிஷிகேஷ் முகர்ஜி, இசையமைப்பாளர் வசந்த் தேசாய் இணைப்பில் உருவான குட்டி திரைப்படத்தில் வாணியின் பாடல் வெளிவந்தது. அதன் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்.

தேன் குடித்த வண்டாய் ரசிகர்கள் கிறங்கினர். பழைய கிழட்டு குரல்களை கேட்டு அலுத்து இருந்த ஹிந்தி சினிமா ரசிகர்கள் வாணியை கொண்டாடினர். அந்த படத்தில் பாடிய போலரே பப்பி ஹரா பாடப்பட நாட்களே இல்லை என்ற அளவு வானொலி பாடி களைத்தது. பினாகா சிறப்பு பாடலில் இந்த பாடல் தினமும் நம்பர் ஒன் பாடலாக சுமார் 4 ஆண்டுகள் ஒளிபரப்பானது . இந்த பாடல் 5 விருதுகளை அள்ளிச் சென்றது. தான்சேன் விருது கிடைத்தது. சுற்றிய இடமெல்லாம் பாராட்டு, ஏராளமான பாடல் வாய்ப்புகள். 

பாராட்டு வந்தால் எதிர்ப்பு வரமால் இருக்குமா? வந்தது. வாணியின் திறமை, வெற்றியைக் கண்டு இந்திக்காரர்களுக்குப் பொறாமை வந்துவிட்டது. மதராசி நம்மை வீழ்த்துவதா என்ற அவர்களின் வழக்கமான எண்ணம் அவருக்கு பல இடையூறுகளை தந்தது. வாணிஜெயராமை வைத்து எந்த இசையமைப்பாளர் பாட்டு எடுக்கிறாரோ, அவருடைய இசையமைப்பில் தான் பாடுவதில்லை என்று பிரபல இந்திப் பாடகி ஒருவர் (ஒருவர் என்ன ஒருவர் லதா மங்கேஷ்கர் தான்) ஸ்டிரைக் செய்தார். லதா, ஆஷா, போன்றவர்களின் கூட்டணியால் வாணிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பத்திரிகைகள், ரசிகர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.

மைக் இல்லாமலே 2 கிலோமீட்டர் வரை சத்தமாக பாடக்கூடிய வரத்தை இறைவன் வாணிக்கு தானே வழங்கி இருந்தான். எந்த மொழியிலும் தெளிவு, கர்நாடிக், ஹிந்துஸ்தானி என எல்லா இசையிலும் சிறந்த ஆளுமை என்பது அவர்களை உறுத்தியது போலும் ... எனினும் மராட்டி, ஒரிய வாய்ப்புகள் தொடர்ந்து வந்தன. நாம் செய்த தவமோ என்னவோ, திரை இசை சக்கரவர்த்தி விஸ்வநாதன் பார்வையில் பட்டார். தமிழில் நுழைந்தார். எல்.ஆர்.ஈஸ்வரிக்கு பிறகு தமிழில் பாடிய தமிழ் பெண் இவரே.

நாளை எம்.ஜி.யார் கட்டளை, கண்ணதாசன் பாராட்டு, முத்திரை பதித்த பாடல்கள், ஓவியம் வரைவது,, பாடல் எழுதுவது, இசை அமைப்பது என்ற இவரின் பல்வேறு திறமைகள், என தொடரும் ... 

Kommentare

Beliebte Posts aus diesem Blog

மிரட்டும் செளந்திரவல்லி! ஜெயா டி.வி.யில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர் "செளந்திரவல்லி'. நடிகைகள் மதுபாலா, மகேஸ்வரி, சுதா சின்னத்திரை பண்டிட்ஸ்! சின்னத்திரையில் நடிக்க வாய்ப்புக் கிடைத்து தங்களது திறமையை வெளிப்படுத்திய நடிகர், நடிகைகளுக்குத் தங்களது பாடும் திறமையை வெளிப்படுத்தவும்  ஆட்களைத் தேடும் ஹரிஹரன்! இந்திய இசையில் சர்வதேச புகழ் பெற்ற ஹரிஹரன்,​​ தனது இசை அகடமிக்காக ஐந்து பேரை ஜெயா தொலைக்காட்சியில் மிகப்பெரிய "ரியாலிட்டி ஷோ' நடத்தி தேர்ந்தெடுக்க புதுப் படங்கள்! நடிகர் விஜயகாந்தின் "கேப்டன் டி.வி.' வருகிற ஏப்ரல் 14ம் தேதி முதல் தனது ஒளிபரப்பை துவங்குகிறது.​ இதற்கான விழாவை பிரம்மாண்டமாக நடத்த "விதை'யில் சூர்யா! கடந்த பொங்கல் தினத்தன்று விஜய் டி.வி.யில் "ஒரு விதை - ஒரு கோடி திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது. "விதை' என்ற அந்தத் திட்டம் மூலம் நடிகர் சூர்யாவின் நெகிழ வைக்கும் மகான்! இந்த பூமியில் பிறக்கும் அனைத்து பிறப்புக்கும்  காரணம் உண்டு. மிகச் சிலரே தங்களது பிறப்பின் ரகசியங்களை
இன்று பொன்விழா காணும் இசைக்குயிலுக்கு வாழ்த்துக்கள்! சின்னகுயில் சித்ரா என்றாலே இனிய குரலும், மலர்ந்த சிரிப்புமே நமக்கு நினைவில் வரும். 1963 ஆம் ஆண்டில் ஜூலை 27ல் மேடை பாடகராக விளங்கிய கிருஷ்ணன் நாயருக்கும் வீணை மேதை சாந்தகுமாரிக்கும் இளைய மகளாக கேரளா திருவனந்தபுரத்தில் சித்ரா பிறந்தார்.