ஆஸ்கார் போட்டியில் தமிழ்ப்படங்கள்!
ஒவ்வொரு வருடமும் ரிலீஸாகும் சிறந்த படங்களை ஒவ்வொரு பிரிவுகளாக வகைப்படுத்தி அந்தந்த பிரிவில் சிறந்த படத்திற்கு ஆஸ்கார் விருது வழங்கப்படும்.
இந்த வருடம் வெளியான சிறந்த படங்களை ஆஸ்காருக்கு தேர்ந்தெடுக்க 16 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது ஆஸ்கார். இந்த வார இறுதியில் ஆஸ்காரின் குழு படங்களை பார்த்து தேர்வு செய்ய உள்ளது. அந்த வரிசையில் தமிழிலிருந்து ஏழாம் அறிவு, வழக்கு எண் 18/9 ஆகிய படங்கள் இருக்கின்றதாம்.
புதுமையான கதைகள் என ஆஸ்கார் குழுவினர் இந்த படங்களை பாராட்டியுள்ளனர். இந்திய அளவில் இந்தி படங்களான ‘தி டர்ட்டி பிக்சர்’, ‘கஹானி’, ‘கேங்ஸ் ஆஃப் வேசிபூர்’ ஆகிய படங்களும், தெலுங்கில் ‘ஈகா’ படமும் ஆஸ்கார் குழுவினரின் பார்வையில் இருக்கிறதாம்.
Kommentare
Kommentar veröffentlichen